எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என ரஜினி கூறியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ரஜினிகாந்த் இன்று (நவம்பர் 30) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, புதிய கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் நடிகர் ரஜினி கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாகவும் அழைத்து பேசினார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருக்கிறது. சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய முடியும்.

மேலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர் என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் நடிகர் ரஜினி, மன்ற நிர்வாகிகளிடம் ஆவேசம் அடைந்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன். அதனால் நாம் தேர்தலில் போட்டியிட்டாலும், அதிபட்சமாக 15% வாக்குகள் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை. தேர்தல் களத்தில் நின்றால் வெற்றிபெற வேண்டும். ஆனால், தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தனித்து போட்டியிடுவது சாத்தியமோ என்பது குறித்து விவாதித்துள்ளார்.

இதனையடுத்து, போயஸ்கார்டன் திரும்பிய ரஜினி செய்தியளார்கள் சந்திப்பில், மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், அவர்களது கருத்துகளை முன்வைத்தனர். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

அப்போது, நீங்கள் எந்த முடிவு செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்க தயார் என நிர்வாகிகள் உறுதியளித்து உள்ளனர். எனவே, நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று கூறியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்