கோவையில் 6 வயது சிறுமி பலாத்கார கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம்
கோவை:
 
தமிழ்நாட்டில் கோவையை உலுக்கி இருக்கக்கூடிய மிக முக்கிய வன்கொடுமை சம்பவங்களில் ஒன்றாக இருக்கிறது இந்த கோவை துடியலூர் அருகே பனிமலை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு.
 
இது தொடர்பாக கிட்டத்தட்ட 6 நாட்களாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
200க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 6 நாட்களுக்கு பிறகு போலீசார் சந்தோஷ்குமார் என்பவனை கைது செய்துள்ளனர்.
 
கோவை துடியலூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறான். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரித்து வருகின்றனர்…
 
கோவை துடியலூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த காரணமாக. சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்த நபர் ஆர்எஸ்எஸ்/இந்து முன்ணனியின் கிளை அமைப்பான பாரத்சேனா அமைப்பைச்சார்ந்தவன் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது
 
போலீசாருக்கு கிடைக்கபெற்றிருந்த ஒரே தடயம் என்பது சிறுமியின் உடல் மீது போத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டீ-ஷர்ட்.
 
அந்த டீ-ஷர்டை வைத்தே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
சிறுமி மாயமான தினம் தான், சந்தோஷ்குமாரின் பாட்டி உயிரிழந்திருக்கிறார், இதனால், அவர்களது வீட்டில் யாரும் சிறுமியை தேடவில்லை.
 
இந்த தடயத்தின் வாயிலாகவே கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி தற்போது சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்திருக்கின்றார்கள்.
 
34வயதான தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்திருப்பதாக தெரிய வந்துள்ளது
 
அவ்வப்போது தனது உறவினர் வீடு இருக்கக்கூடிய அந்த சிறுமியின் சொந்த ஊருக்கு சென்று வந்ததாக தெரியவந்துள்ளது.
 
அப்போது இந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
இதனிடையே, சிறுமியின் வாயில் அடைத்து வைத்திருந்த துணியில் இருந்த மண்ணும், சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த மண்ணும் ஒத்துப்போகியுள்ளது.
 
அதன் அடைப்படையில் சந்தோஷ்குமாரை இன்று அதிகாலை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து செய்த விசாரணையில் இந்த சிறுமியை பார்த்து சிறுமியை இதுபோன்ற வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டதாக தெரியவந்திருக்கிறது. 
 
சிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமாரின் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழந்துள்ளார். தனது பாட்டியை சந்தோஷ்குமார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.