இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள படம் “கசடதபற”. இப்படத்தில் ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் பணிபுரியவுள்ளனர் என்பதும் மேலும், இந்த படத்தில் ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கசடதபற திரைப்படத்தின்ல் பணிபுரியும் ஆறு படத்தொகுப்பாளர்கள் குறித்த தகவலை பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் வெளியிட்டுள்ளார். அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகிய ஆறு பேர் இந்த படத்தின் எடிட்டர்களாக பணிபுரிய உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள ஆறு ஒளிப்பதிவாளர்களின் பெயர்களை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தில் பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரியவுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு இசையமைப்பாளர்களின் பெயர்களை பிரபல இசையமைப்பாளரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் நாளை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நான்கு கதைகளில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.