மயிலாடுதுறை அருகே முக்கறும்பூரில் பருத்தி வயலில் விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் நிலத்தில் வழியே இந்த பணி நடைபெறுவதை தடுக்க அவர்கள் பல முறை சாத்விக முறையில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த விபரித முயற்சி போராட்டதை எடுத்து உள்ளதாக தெரிவித்தனர்.
 
மேலும் அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பாதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கிற்கு குழாய்கள் வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம், எரிவாயு  குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு பாஜகவின் மத்திய அரசும் , அதிமுகவின் மாநில  தொடர் ஆதரவை தந்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.