கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடிகைகள் சிம்ரன், திரிஷா இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் இப்படம் ஒரு ஆக்சன் படம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் இருவரும் சகோதரிகளாக நடிக்க உள்ளதாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

பேட்டியில் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “இது மிகவும் வித்தியாசமான கதை. படத்தில் ‘நீர்’ முக்கியமான விஷயமாக அமைந்துள்ளது. நான் கதை எழுதும்போதே இரு பெண் கதாபாத்திரங்கள் தான் இக்கதைக்கு பொருத்தமாக இருக்க முடியும் என்று நினைத்தேன். மேலும் இருவருக்கும் இருவரை பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அப்போது தான் திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.மேலும் இதில் இருவரும் சகோதரிகளாக நடிக்க உள்ளனர்.

படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது . சென்னை, பிச்சாவரம், கேரளா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு மற்றும் சன் லோகேஷ் எடிட்டிங் செய்ய உள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது