சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதையடுத்து தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த ஜூலிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘அம்மன் தாயி’, ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’ ஆகிய படங்களில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். மேலும் ‘உத்தமி’ என்ற படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற.

இந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதையை பின்னணியாக வைத்து “Dr.S.அனிதா M.B.B.S.,” என்ற தலைப்பில் அஜய்குமார் திரைப்படம் இயக்கி வருவதாக செய்தி வெளியானது. அந்தப் படத்தில் அனிதாவாக ஜூலி நடிக்கிறார்.

இதை அறிந்து, இந்தப் படத்திற்கு தடை கேட்டு அனிதாவின் அப்பா வழக்கு தொடர்ந்துள்ளார். “எனது மகள் தொடர்பான திரைப்படத்துக்கு நானோ எனது மகனோ எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. அதனால், அஜய்குமார் இயக்கும் திரைப்பட தயாரிப்புக்கு தடை விதிக்கவேண்டும். மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.