தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது, மாணவர்கள் நலனே முக்கியம் என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெலங்கானாவில் இன்று முதல் ஜூன் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூன் -8 இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட இன்டெர்னல் அஸ்ஸஸ்மென்ட் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன்.15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் அதிரடி