நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் ஒப்பந்தமிட்டு, 102 கோடி வழங்கியுள்ளது நாசா.

2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,714 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் நிலவில் 4ஜி/எல்டிஇ நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு 14.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 102 கோடி) நாசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா.. ஆதாரம் கேட்டு 600 விஞ்ஞானிகள் கடிதம்