நான் என்ன சொன்னாலும், இவன் கேட்கமாட்டேங்குறான் என்று விஜய் சேதுபதி இயக்குனர் அருண்குமாரை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.

அருண்குமார் இயக்கிய மூன்று படங்களிலும் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. படக்குழு அனைவருடனும் யுவன் சங்கர் ராஜாவும் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய் சேதுபதி இப்படத்தின் கதை ரொம்ப சிம்பிள். மனைவியை ஒரு வில்லன் கடத்திபோய்விட ஹீரோ கடல் கடந்து போய் காப்பாற்றி வருகிறான். அது என்ன இடம் என்று சொன்னால் அதைப் பிரச்சனை ஆக்கி விடுவார்கள் என்றார்.

மேலும் இந்தப்படத்தின் இயக்குனர் அருண்குமார் மிகத்திறமையானவன். முதல் படம் முடிந்த உடனே என்னிடமே தொடர்ந்து படம் பண்ணாதே வெளியே போய் படம் பண்ணு எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால் யாரும் அவனை நம்பவில்லை. அதனால் ஒரு ஹிட் படம் கொடுப்போம் வா எனச் சொல்லி சேதுபதி செய்தோம். அப்படம் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வெளியே போய் படம் செய் என அனுப்பி வைத்தேன். எந்த ஹீரோவும் நம்ப வில்லை.

நான் சில ஹிரோக்களை பேசி அனுப்பி வைத்தேன். அதுவும் நடக்கவில்லை. மீண்டும் என்னிடமே வந்து விட்டான். இந்தப்படமும் கண்டிப்பாக ஹிட்டாகும். இப்போதும் அதையே தான் சொல்லியிருக்கிறேன். என்னை விட்டுப் போய் வெளியே படம் செய் என சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் என கலகலப்பாக பேசினார்.

இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகிறது. விஜய் சேதுபதியின் இந்த புதிய பரிமாணம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது போய்ஷன் சர்வதேச பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் பெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட இருக்கிறது.