நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் இன்னும் 40 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்தவவுடன் காபந்து அரசாகி விடும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
 
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றது.
 
இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் நேற்று 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்ட பிரமாண்ட மாநாட்டு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தனர்.
 
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
குழுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 
இதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான 8 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைச்சாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி சேருவது என்ற குழப்பம் நீடித்து வரும்  நிலையில் , காங்கிரஸ், மதிமுக விசிக , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணி அறிவித்த திமுக     நாடாளுமன்ற தேர்தல் குழுவுக்கு கூட்டணி சார்பாக பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான  குழுவும் திமுகவே முதலில் அமைத்து இருப்பது குறிப்பிடதக்கது .
 
இதே போல நாடாளுமன்ற 2004ல் தேர்தல் முன்பாகவே கூட்டணியும் கண்டு , தேர்தல் அறிக்கையும் தயார் செய்து பரப்புரை அப்போதய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஈடுபட 40/40 தொகுதியும் திமுக கூட்டணியில் வெற்றி  கண்டு ., ஜெயலலிதா தலைலையில்  தினகரன் உட்பட அனைத்து அதிமுகவினரும்  பரிதாபமாக ஒரு தொகுதியிலும் கூட வெல்ல முடியாமல் தோற்று போனதை தமிழகம் கண்டது .