கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலத்தில் சில மாவட்டங்களில் பிற்போக்கு இந்துத்வா அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.
 
இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் அய்யப்பனை தரிசிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் வன்முறை அரங்கேறியது.
 
இதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27-ந் தேதி வரை மண்டல பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.
 
இந்த நாட்களிலும் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் இந்துத்வா அமைப்பினரின் எதிர்ப்பால் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது.
 
சபரிமலையின் முக்கியமான இந்த விழா காலத்திலும் அங்கு இந்துத்வா போராட்டம்க்கு குறைவில்லை. எனவே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது.
 
எனினும் ஆன்லைனில் பதிவு செய்யாமல் அதிரடியாக கடந்த 2-ந்தேதி அதிகாலையில் பிந்து (வயது 42) மற்றும் கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள் திடீரென சபரிமலையில் அய்யப்பனை தரிசித்தனர்.
 

சபரிமலையில் அனுமதிக்க லட்சக்கணக்கில் பெண்கள் 620 கீமி மனித சுவர் போராட்டம் ஜன 1 ஆம் தேதி  நடத்தினர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சில  இடங்களில் வன்முறை வெடித்தது.
இதில் 4000 பேரகளுக்கு மேல கைதாகி அதில சுமார் மூவாயிரம் பேர் இனி மேல் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என இந்துத்வா அமைப்பினர் கெஞ்சி எழுதி கொடுத்தால் ஜாமின் பெற்றனர்.
 

கேரளாவில் கலவரம் செய்து விட்டு போலிசை கண்டு ஓடும் ஹிந்துவா அமைப்பினர்

இதைப்போல இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் சபரிமலையில் தரிசனம் செய்தார். இந்த மண்டல பூஜை-மகரவிளக்கு காலகட்டத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் அய்யப்பனை தரிசனம் செய்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு கூறியுள்ளது.
 
ஆனாலும் அரசு தாக்கல் செய்த தகவல் அடிப்படியில் இதில் மூன்று பேரின் வயதில் சில குறைபாடுகள் கண்டுபிடிக்கபட்டன . முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள வீரளூர் மதுரா கூட்ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா. 1956-ம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 62 வயது ஆகிறது. ஆனால் அவருடைய ஆதார் அட்டையில் 30.6.1970 அன்று பிறந்ததாக தவறுதலாக பதிவாகி உள்ளது.
 
இந்த ஆண்டு ஆதார் அட்டை மூலம் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய அவர் முன்பதிவு செய்துள்ளார். இதனால் அவருடைய வயது 48 என கருதி 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை கோவிலில் அனுமதித்ததாக கேரள அரசு அறிவித்துள்ள பட்டியலில் சந்திரா பெயரும் சேர்க்கப்பட்டது.
 
இது குறித்து சந்திரா கூறுகையில், “தொடர்ந்து 8 ஆண்டாக சபரிமலை சென்று வருகிறேன். ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி பிரச்சினையால் என்னுடைய பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது” என்றார்.
 
ஆனாலும் மிதம் உள்ளவர்களின் வயது 50க்கும் கிழே உள்ளதால் கேரளா அரசு உச்சநீதிமன்றதின் ஆணையை சிறப்புற நிறைவேற்றி உள்ளதாக சட்ட் நிபுணர்கள் கருந்து தெரிவித்து உள்ளனர்
 
இவ்வாறு மிகவும் பரபரப்பும், பதற்றமுமாக கடந்த சபரிமலையின் தற்போதைய விழா நாட்கள் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 65 நாட்கள் நடந்த இந்த விழாக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
 
நேற்று அதிகாலையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராகவ வர்மா ராஜா சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து பஸ்மாபிஷேகம் நடந்தது. பின்னர் ஹரிவராசனம் இசைக்க 6.15 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டது.
 
அடுத்ததாக சபரிமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைக்காக அப்போது 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
 
சபரிமலையில் தற்போது நடை அடைக்கப்பட்ட போதும், மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையிலான மோதல் தீர்ந்தபாடில்லை. ஆளும் இடதுசாரிகளும், பா.ஜனதாவினரும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் அனைத்தும் தோல்வியடைந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
 
ஆனால் 51 இளம் பெண்கள் தரிசித்த நிலையில் இன்னும் 7213 இளம் பெண்கள் ஆன்லைனின் தரிசிக்க விண்ணப்பித்த நிலையில் சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க நடத்தப்பட்ட போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பெருமையுடன்  தெரிவித்து உள்ளார்.