தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tnpsc) சார்பில் குரூப்-I பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: 139 இடங்கள்
துணை ஆட்சியாளர் – 27
துணை காவல் கண்காணிப்பாளர் – 56
உதவி ஆணையாளர் – 11
கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 13
மாவட்ட பதிவாளர் – 07
உதவி இயக்குனர் கிராமப்புற வளர்ச்சி – 15
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி – 08
தீ மற்றும் மீட்பு மாவட்ட அதிகாரி – 02

வயது வரம்பு: 01.07.2018 தேதிப்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: முதல்நிலை தேர்வுக் கட்டணமாக ரூ.100 மற்றும் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முக்கிய தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.
ஒன்டைம் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019

முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019 FN

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tnpsc) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…