தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் அதிதீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது மற்ற மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு நேற்று 4,496 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 4,549 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. இன்று மட்டும் 69 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று 5,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,07,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி