மலையாள இயக்குரான ஜீத்து ஜோசஃப் பாபநாசம் படத்தை தொடர்ந்து தமிழில் இரண்டாவதாக இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கும் நிலையில், அந்த படத்தில் அவரது சகோதரியாக ஜோதிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி தற்போது மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தற்போது குலேபகாவலி இயக்குனர் கண்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதர, சகோதரியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜோதிகாவின் சகோதரர் சுராஜ் இந்த படத்தை தயாரிக்கின்றார். இவர் இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.