தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. அனைவரும் வாக்களிக்கவும், நூறு சதவிகித வாக்குப்பதிவை முன்னிருத்தியும் தோ்தல் ஆணையம், தன்னாா்வலா்கள் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 18) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்தல் நடைபெறும் நாளை காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.