“என்.ஜி.கே” படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இணை இயக்குநர்கள் முதல் டீ பாய்வரை மொத்த படகுழுவினர் சுமார் 130 பேருக்கும் 1040 கிராம் (1.04 கிலோ) தங்க நாணயங்களை சூர்யா பரிசளித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு ஜனவரி 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் குழு, ஒளிப்பதிவாளர்கள் குழு, கலை இயக்குநர்கள் குழு என அனைவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசளித்துள்ளார் சூர்யா.

படப்படிப்பின் கடைசி நாளில் சூர்யா அளித்த இந்த எதிர்பாராத பரிசு படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைவடைய வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் சூர்யாவிற்கு ரசிகர்களின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

என்.ஜி.கே படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், “சூர்யாவுடனான பயணம் சிறப்பானதாக இருந்தது. அவருடைய திறமை ஈடுபாடு கண்டு வியந்து விட்டேன். என்.ஜி.கே படக்குழு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா பேசும்போது, “செல்வராகவன் திரைக்கும் முன்னும், திரைக்குப் பின்னும் என்னை புதிய உயரத்துக்கு நகர்த்தியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.