விஜய் குமார் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான உறியடி படம் சமூகம் சார்ந்த கருத்துக்களை கருவாகக் கொண்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து விஜய் குமார் இயக்கி நடித்திருந்த “உறியடி 2” படமும் ஊழல், சாதியக் கட்சிகள், அரசியல்வாதிகள் என அரசியல் பேசும் விதமாக உள்ளது. சமூக அவலத்தை துடைத்து எறியத் துடிக்கும் இளைஞர் பட்டாளம், தன் கிராமத்தை பாதிக்கும் ஆலைக்கு எதிராக எப்படி போராடுகிறார்கள் அதிலிருந்து அவர்களுக்கு விமோர்ச்சனம் கிடைக்கின்றதா என்ற கதையை கருவாக கொண்டு உருவாகி உள்ள படம் உறியடி 2.

இப்படத்தில் பணக்கார வர்க்கத்தையும், அவர்கள் ஏழைகளை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்ச்சி மிகுந்த காட்சிகளால் காட்டப்பட்டுள்ளது.

உறியடி 2 படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகின்றன. படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்த் கூடுதல் பலம் சேர்த்திருந்தார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்னமே படக்குழுவின் முக்கியமனோருக்கு ஐபேட் பரிசை அளித்து அசத்தி உள்ளார் சூர்யா. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.