பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செல்போன் பயன்படுத்த கூடாது என்று அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
காவலர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாகவும் வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக புகார் எழுந்தது.
 
இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, காவலர்கள் செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகிறது.
 
இதனையடுத்து உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம் என்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டு உள்ளதாகவும் டிஜிபி அலுவலகம் ஒவ்வொரு காவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.