டெண்டர் முறைகேடு வழக்கில் பதிலளிக்க அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்களுக்கு தொடர்ந்து டெண்டர்களை வழங்கியதாக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெண்டர் முறைகேடு வழக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
மேலும் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலர், சிபிஐ ஆகியோரும் வரும் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.