சென்னை லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர் அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர், பொதுச்செயலாளர், துணை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர்.
 
அப்போது அவர்கள் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அப்போது திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.மோகன் உடனிருந்தனர்.
 
அந்த சமயத்தில் வெற்றி பெற்ற ராயப்பேட்டை, புதுக்கல்லூரி மாணவர் அமைப்பு தலைவர் முகமது நபியல், துணைத் தலைவர் அரவிந்த், பொதுச்செயலாளர் முகமது இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள்.லயோலா கல்லூரி (காலை) மாணவர் அமை ப்பு தலைவர் கே.தினேஷ் கண்ணா, நிதிச் செயலாளர் சையத் யாஷிக், ஹாஸ்டல் வெல்பேர் செயலாளர் மோதிலால் ரத்தினம், ஈவண்ட் செயலாளர் ஜாக்சன்.லயோலா கல்லூரி (மாலை) மாணவர் அமைப்பு கலாச்சார துணை செயலாளர் எம்.அஜித், நிதி செயலாளர் டி.ஹரிஷ், விளையாட்டுத்துறை செயலாளர் பி.யுவராஜ், உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உரையாடிய பின்னர் அவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தார்.