உத்தரகாண்ட் மாநில பாஜக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரில், பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பாஜகவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் புகாரில் சிக்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாகச் சூதாட்டம் மற்றும் மது விருந்த்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரே பாலியல் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தின் பஹத்ராபாத்தில் உள்ள ஜ்வாலாபூரைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர். இவர் மீது பேகம்புரா கிராமத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சில மாதங்களுக்கு முன்னர் சுரேஷ் ரத்தோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அப்போது நான் புகார் அளிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஹத்ராபாத் காவல்நிலைய அதிகாரி மகேந்திர புன்திர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலியல் வழக்கு குறித்து சுரேஷ் ரத்தோர் கூறுகையில், என் மீது தொடரப்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. சிலர் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

பெண்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது குவிந்த 134 புகார்கள்; கமலாலயத்தில் கட்டாயம் விசாகா கமிட்டி