டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா- கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

41 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்கினா். முதல் கால்பகுதி 15 நிமிடம் ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 16-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த முறை குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர 30 நிமிடம் ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

3வது கால் பகுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் வீரர்களை கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் தடுத்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வார்டு கோல் அடித்தார். இதனால் 3வது கால் பகுதி 45 நிமிடம் ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

[su_image_carousel source=”media: 25271,25270″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

4வது கால் பகுதி ஆட்டத்தில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்று கிரேட் பிரிட்டன் விளையாடியது. அதேவேளையில் தடுப்பு ஆட்டத்துடன் மேலும் கோல் அடிக்கும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் விளையாடினர்.

ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கிரேட் பிரிட்டன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா ஆட்ட முடிவில் (60 நிமிடம்) 3-2 என வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கடைசியாக கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பின் கடந்த 2016 ஆம் ஆண்டுரியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியம் அணியிடம் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பின்னர் 41 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தான் அரையிறுதிக்கு மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் பாட்மிண்டன்: இந்தியாவிற்கான 2வது பதக்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து