[su_heading size=”15″ align=”left” margin=”30″]கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது .[/su_heading]
 
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை ஊரடங்கு நேரத்தில் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர்.
 
இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன் டியூசன் செல்லாமல் படாலா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான்.
 
அழுகையும் ஆத்திரமுமாய் வந்த சிறுவனை அழைத்து போலிஸார் ஏன் இங்கே வந்தாய்  என கேட்டுள்ளனர்.
 

அப்போது அந்த  சிறுவன், அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பிவைப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான்.
 
அதுமட்டுமின்றி, தன்னை டியூசன் அனுப்பி வைத்த அம்மா, அப்பா மற்றும் டியூசன் டீச்சர் ஆகியோரை கைது செய்யவேண்டும் என கூறியுள்ளான்.
 
இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்ற டி.எஸ்.பி குர்திப் சிங், அவரிடம் டியூசன் எடுக்கிறீர்களா எனக கேட்க..
 
அதிர்ந்து போன ஆசிரியர் முழிமிழித்து  இல்லை என சோகமாக  மறுக்க ..
 
சிறுவன் உடனே அழுகையுடன் தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக கூறியுள்ளான்.
 
என்ன செய்வது என புரியாத ஆசிரியர் பெற்றோரை அழைத்து பேச பின்னர் அனைவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்கள் .
 
இதனையடுத்து இனி டியூசன் எடுக்கக்கூடாது என ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்று ஆசிரியருக்கு கொடுத்த அதே அறிவுரையை  அதிர்ச்சியில் உறைந்து போன  பெற்றோரிடம் கூறி சிறுவனை ஒப்படைத்தார்.