அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கதை சமீபத்தில் வெளியானது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் கதிர் இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்கள். திடீரென கதிர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்குவதற்காக, விஜய் தனது அணியை ஜெயிக்க வைக்கிறார்.

இந்த கதை வெளியே எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. தங்களுக்குள் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க, இயக்குனர் அட்லி தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

சர்கார் கதை விவகாரம் போலவே, இப்படத்திற்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. உதவி இயக்குனர் ஒருவர் இக்கதைக்கு உரிமை கோரியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் கதை வெளியானதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.