தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் “தமிழரசன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, சங்கீதா கஸ்தூரி, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்

இந்நிலையில், இப்படத்திற்காக “புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை இசைஞானி இளையராஜா இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பாட வந்த ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து கொடுத்து இளையராஜாவும் இப்படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் சிவா ஆகியோர்களும் வரவேற்றனர்.

கடந்த ஆண்டு கேணி என்ற படத்தில் எஸ்பிபி அவர்களுடன் ஒரு பாடலை பாடிய கே.ஜே.ஜேசுதாஸ், அதன் பின் இப்படத்தில் தான் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.