542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பலவித EVM புகார்களின் குளறுபடி புகார்கள் வந்த நிலையில் , பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
 
அதேவேலையில் தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது.
 
பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் 100 EVM மர்ம முறையில் வந்து இரவில் இறங்க தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
 
தற்போது பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வந்தார்.
 
ஆனால் அதிமுக முதல்வர் எடப்பாடி சாணக்கிய ராஜதந்திரத்தால் அவரின் அனைத்து முயற்ச்சிகளும் வீண்ணாகி விட்டது.
 
இதனால் மோடி அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கடும் கோபத்தில் ஒபிஎஸ் உள்ளாராம்..
 
அதே நேரத்தில் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அதில் 110 இடங்களை வைத்துள்ள திமுக, மற்றும் 115 இடங்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு ஆகிய இருவருக்குமே தலா 3 இடங்கள் கிடைக்கும்.
 
 
திமுக-வை பொருத்த வரை ஒரு இடம் கூட்டணி விதிப்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
அடுத்த இரண்டு யாருக்கு கொடுப்பது என்பது திமுக தலைவர் ஸ்டாலின் கையில் உள்ளதால் பரபரப்பு எதுவும் இல்லை
 
ஆனால் 3 எம்பி பதவியில் யாரை அமர்த்துவது என்று அதிமுக அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுஇழுபறி நடந்து வருகிறது.
 
அதிமுக – பாமக தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்த போது ஒரு மாநிலங்களவை பாமகவுக்கு வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
மீதமுள்ள இரண்டு இடத்தில் ஒரு இடத்தை பாஜகவுக்கு தரும்படி பாஜக மேலிடம் அதிமுகவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பாமகவுக்கு ஒரு இடம், பாஜகவும் ஒரு இடம் என இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எப்படி பதவி வழங்குவதும் என்றும், மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையுமே என்ற அச்சத்திலும் அதிமுகவின் எடப்பாடி ஒ.பிஎஸ் இருவரும் கவலையில் உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன
 
மேலும் இதுக்குறித்து முடிவு எடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
 
பாஜக சொல்லிய இடத்தில் கை எழுத்து போட வேண்டிய நிலையில் அதிமுக அடங்கி இருக்கும் கருத்தை உடைத்து . ,
 
பாஜகவை துச்சமென அதிமுக கருதி தூக்கி எறியுமா அல்லது வழக்கம் போல அடங்கி போகுமா என்பது குறித்து அநேகமாக இன்னும் இரண்டு வாரத்தில் இதுக்குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.