உத்தரப்பிரதேசத்தில் குழுந்தைகள்‌ நல மருத்துவர்‌ கஃபீல்‌ கான்,‌ கோராக்பூர்‌ மாவட்டத்தின்‌ குற்றப்‌ பின்ணனி‌ கொண்ட நபர்கள்‌ பட்டியலில்‌ இணைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில், கடந்த 2017 ஆம்‌ ஆண்டு உத்தரப்பிரதேசத்தின்‌ கோராக்பூர்‌ மாவட்டத்தில் உள்ள‌ பாபா ராகவ்‌ தாஸ்‌ மருத்துவமனையில்‌ ஆக்சிஜன்‌ பற்றாக்குறையால்‌ 100க்கும்‌ மேற்பட்ட குழந்தைகள்‌ உயிரிழந்தனர்‌.

ஆக்சிஜன்‌ பற்றாக்குறையால்‌ குழந்தைகள்‌ இறக்கவில்லையெனக்‌ கூறிய யோகியின் உத்தரப்பிரதேச அரசாங்கம்‌ அந்த மருத்துவமனையைச்‌ சேர்ந்த குழந்தைகள்‌ நல மருத்துவர்‌ கஃபீல்‌ கான்‌ உட்பட ஒன்பது பேரைக்‌ கைது செய்தது.

2017 ஆம்‌ ஆண்டு கைது செய்யப்பட்ட மருத்துவர்‌ கஃபீல்‌ கான்‌, 2019 ஆம்‌ ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும்‌ விடுவிக்கப்பட்டார்‌.

இதையடுத்து அவர்மீது பல்வேறு வழக்குகள்‌ தொடர்ந்து பதியப்பட்டு வந்ததன. குடியுரிமை திருத்தச்‌ சட்டத்திற்கு எதிராக மருத்துவர்‌ கஃபீல்‌ கான்,‌ அலிகார்‌ முஸ்லிம்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ ஆற்றிய உரை வெறுப்பை பரப்புவதாகக்‌ கூறி, யோகி அரசு கடந்த 2020 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ தேசிய பாதுகாப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ கஃபீல்‌ கானை கைது செய்தது.

கடந்த செப்டம்பர்‌ மாதம்‌ இந்த வழக்கை விசாரித்த அலகாபாத்‌ உயர்‌நீதிமன்றம்‌, கஃபீல்‌ கான் பேச்சு வெறுப்பையும்‌ வன்முறையையும்‌ பரபரப்பவில்லையென கூறி,‌ கஃபீல்‌ கான் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில்‌, உத்தரப்பிரதேசத்தில் குழுந்தைகள்‌ நல மருத்துவர்‌ கஃபீல்‌ கான்‌ கோராக்பூர்‌ மாவட்டத்தின்‌ குற்றப்‌ பின்ணனி‌ கொண்ட நபர்கள்‌ பட்டியலில்‌ புதிதாக இணைக்கப்பட்டுள்ள 81 பேருடன்‌ சேர்ந்து இணைக்கப்பட்டுள்ளார்‌.

இதன்‌மூலம்‌ அவருடைய நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌ காவல்துறையால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விவரங்கள்‌ அனைத்தும்‌ காவல்துறையினால்‌ தொடர்ந்தது குறிக்கப்படும்‌‌. அந்தப்‌ பட்டியலில்‌ மொத்தம் 1534 நபர்கள்‌ இடம்பெற்றுள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப்‌ பதிலளிக்கும்‌ வகையில்‌ மருத்துவர்‌ கஃபீல்‌ கான்‌ தன்னுடைய ட்விட்டர்‌ பக்கத்தில்‌ ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்‌. அதில்‌, “உத்தர பிரதேச அரசாங்கம்‌ என்னுடைய விவரக் குறிப்பை தொடங்கியுள்ளது. இதன்‌ மூலம்‌, அவர்கள்‌ என்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ என்னைக்‌ கண்காணிக்க இருப்பதாகக்‌ கூறியுள்ளனர், மகிழ்ச்சி.

என்னை 24 மணி நேரமும்‌ தொடர்ந்து கண்காணிக்க இரண்டு காவலர்களையும்‌ பணியில்‌ அமர்த்துங்கள்‌. இதன்‌ மூலம்‌ என்மீது சுமத்தப்படும்‌ போலி வழக்குகளிலிருந்து என்னைப்‌ பாதுகாத்து கொள்வேன்‌. உத்தரப்பிரதேசத்தின்‌ நிலைமை என்னவென்றால்‌, இங்குக்‌ குற்றவாளிகள்‌ கண்காணிக்கப்படுவதில்லை, அப்பாவிகள்‌ தான்‌ கண்காணிக்க்ப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்‌.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50; டீசல் ரூ.4 கூடுதல் செஸ் வரி- மத்திய பட்ஜெட்