நடிகை ரம்யா கிருஷ்ணன் பயணித்த காரில் மது பாட்டில்கள் கடத்தப்பட்டதற்காக கார் டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் மதுபானங்களை கடத்தி வருவதால் போலீசார் சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை ஈசிஆர் சாலையில் கானத்துார் போலீசார் முட்டுக்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ரம்யா கிருஷ்ணனின் கார் சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் காரில் மொத்தமாக 96 பீர் பாட்டில்கள், 8 பிராந்தி பாட்டில்கள் பிடிபட்டன.

இது தொடர்பாக அந்த காரின் டிரைவர் செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த சமயத்தில் அந்த காரில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினையா கிருஷ்ணன் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அதன்பின் டிரைவர் செல்வகுமாரை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜாமீனில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியாகி சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஸ்டைலான, கம்பீரமான நடிப்பிற்காக அதிகம் பேசப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குயின் வெப்சீரிஸ் இரண்டாம் சீசன் எடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதில் நடிப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் ரம்யாகிருஷ்ணன் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’- நிறவெறிக்கு எதிராக தமிழனின் எழுச்சிக் குரல்