96 திரைப்படம் வெளியாகும் விவகாரத்தில் தாம் பலிகடா ஆக்கப்பட்டதாக நடிகா் விஜய் சேதுபதி குற்றம் சாட்டியுள்ளாா்.

பிரேம் குமாா் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96. கடந்த வியாழனன்று வெளியான இப்படத்திற்கு ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகா்களுக்கு நன்றி தொிவிக்கும் விதமாக படக்குழுவினா் இன்று செய்தியாளா்களை சந்தித்தனா். விஜய் சேதுபதி, பிரேம் குமாா், சின்மயி, உமாதேவி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளா் சங்க தலைவா் விஷாலுக்கும் பிரச்சினை நிலவியதால் இப்படத்தின் முதல்நாள் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் செய்தியாளா் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசுகையில், செஸ் விளையாட்டை தாம் விளையாடி இருப்பதாகவும், ஆனால் இந்த பிரச்சினையில் செஸ் காயினாக தாம் மாற்றப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டதாகவும் விஜய் சேதுபதி தொிவித்துள்ளாா்.

திரைத்துறையில் இருக்கும் 5 சதவீத பிரச்சினைகள் மட்டுமே வெளியில் தெரிவதாக கூறிய விஜய் சேதுபதி, 95 சதவீத பிரச்சினைகள் வெளியில் தொியாது என்றும், அதை கூற விரும்பவில்லை என்றும் தொிவித்தாா். மேலும் 96 பட விவகாரத்தில் விஷால் மீது வருத்தம் இல்லை என்றும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.