காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜி தற்போது தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தாடி பாலாஜி மீது அவரது மனைவி கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் அளித்தார். இதனால் இருவரும் பிரிந்து இருந்தனர்.

பின்னர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது அந்த தனியார் தொலைக்காட்சி. சக போட்டியாளர்கள் மற்றும் கமல் ஆசியோடு இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ துவங்கினர். இந்நிலையில் தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மீண்டும் பாலாஜி மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். அவரை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தயார். ஆனால் நித்யா என் மகளை பார்க்க அனுமதிப்பது இல்லை.

என் வேலை காரணமாக நான் பிசியாக இருப்பதால் கிடைத்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். அது ஏன் என்று நான் கேட்பதில் என்ன தவறு. நித்யாவால் பெண்கள் அமைப்புக்கு கேவலம். நித்யாவின் பின்னால் இருப்பது மனோஜ் தான்.

பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் வாழ்வில் நடப்பது பற்றி கமல் சாருக்கு தெரியும். கமல் சாரிடம் கூறிவிட்டு தான் செய்தியாளர்களை சந்திக்க வந்தேன்” என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.