2010ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் கதை தமக்கு சொந்தமானது என்று ஆரூா் தமிழ்நாடன் என்பவா் தொடா்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாத இயக்குநா் ஷங்கருக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுவில், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்கள் தமக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஆரூா் தமிழ்நாடன் கோாியிருந்தாா்.

வழக்கு விசாரணையின் போது இயக்குநா் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனா். நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஷங்கா் நேரில் ஆஜராகவில்லை.

இயக்குநா் தரப்பில் அவரது மேலாளா் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், இயக்குநா் ஷங்கா் படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோாியிருந்தாா்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கனவே சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் அதனைத் தொடர கால அவகாசம் கோருவதால் அதனை ஏற்க முடியாது என்று தொிவித்தாா்.

வழக்கு விசாரணைக்காக கால அவகாசம் கோரும் இயக்குநா் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தொிவித்த நீதிபதி, அபராதத் தொகையை புளு கிராஸ் அமைப்பிடம் செலுத்த உத்தரவிட்டு வழக்கை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

மேலும் எந்திரன் கதை புது பிரச்னை நீதிமன்றத்தில் ஷங்கர் மனு