பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு இணையத்தளங்களில் பல விதமான தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவருடைய முன்னாள் காதலி கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் உயிரிழந்து சட லமாக மீட்கப்பட்டார். 34 வயதில், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது, பாலிவுட்டில் மட்டுமின்றி, இந்திய திரையுலகத்தையே அ திர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், இதற்கு பாலிவுட் திரையுலகில் இருக்கும் சிலர் மீது பு கார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் சுஷாந்த் சிங்கின் மரணம் புரியாத மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகாரை சேர்ந்த நபர் போலிசில் புகார் அளித்துள்ளார். அதில் சுஷாந்த் சிங்கும், அவருடைய காதலியும், அதிக நாட்களாக லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், இதற்கிடையில் சுஷாந்த் சிங் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் நடிகை ரியாவும் அவரின் மரணத்திற்கு காரணம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து ரியாவிடம் சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் ரியா சுஷாந்திற்கு மன அழுத்தம் என்பது இருந்து கொண்டே தான் இருந்தது. அதற்காக அவர் சரியான மருத்துவ முறை எடுத்து கொள்ளவில்லை. அவரை நான் அவருடைய சகோதரியிடம் சென்று இருக்கும் படி கூறினேன், ஆனால் கேட்கவில்லை. அதன் பின் இருவருக்கும் நிறைய ச ண்டைகள் நடந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: திடீரென மாயமான சுஷாந்த் சிங் ட்விட்கள்.. எப்போது விலகும் மர்மங்கள்?

இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் வெளியான செய்திகளில், சுஷாந்த் சிங் தான் சம்பாதித்த பணத்தை சில தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதில் மூன்று கம்பெனிகளில், இரண்டு கம்பெனிக்கு ரியாவை தான் சுஷாந்த் சிங் டைரக்டராக நியமித்துள்ளார்.

சுஷாந்த் இப்படி மன அழுத்ததில் இருக்கும் போது, டைரக்டராக இருக்கும் ரியா, பணத்திற்காக சில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுவதால், இது சுஷாந்த் சிங்கின் மரணத்தின் முக்கிய காரணம் என்று பேசப்படுகிறது.

இதுமட்டுமின்றி ரியா, ஆலிபட் உடைய அப்பாவான மகேஷ் பட்வுடன், நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், மகேஷ் பட் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், சுஷாந்த் சிங்கும், ரியாவும் பிரேக் அப் செய்யனும், சுஷாந்த் ரியாவுக்கு செட் ஆகமாட்டார், அவருடைய நடவடிக்கை எல்லாம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சுஷாந்தின் மரணத்தில், பல்வேறு மர்மங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால், போலிஸ் இதுவரை 15 பேரிடம் வி சாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொரு புறம், ஒரு ரிப்போர்டில் சுஷாந்தின் அவர்களின் பெட்ஷீட்டில் அவருடைய இடதுகை உடைய கட்டை விரல், மற்றும் சுண்டு விரல் மட்டும் ஒரு பெட்ஷீட்டில் பதிந்து இருந்ததாம். இதுதவிர கைரேகை எதுவும் பதியவில்லை என்று கூறப்படுகிறது.

இவ்வாறு வெல்வேறு விஷயங்கள் பரவிகொண்டிருப்பதால் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையா? தற்கொலையா? என ஒரு கேள்வி எழும்பி கொண்டிருக்கிறது.