அதிமுக அரசு ஆட்சியில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் சரியாக சாலை போடாததால் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்துவிட்டது.
 
கடந்த வாரம் அச்சாலை அமைக்கப்படும் போதே சரியான முறையில் கலவை போடப்படவில்லை என்று அப்பகுதிமக்கள் தடுத்து நிறுத்தினர்.
 
அப்போது ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகள் சரியாக செய்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அதே நிலையில் தரமற்று சாலை பணியை முடித்துவிட்டனர். போதுமான தார் சேர்க்கப்படாததால் ஜல்லிகள் பெயர்ந்து விட்டது.
 
எடுத்து சொல்லியும் செய்யததால் இதனை கண்டித்து நாளை (2ம் தேதி) சாலையில் பெயர்ந்து குவியல் குவியலாக கிடக்கும் ஜல்லிகற்களை துடைப்பத்தால் கூட்டி அள்ளி அதிகாரிகளிடம் சேர்க்கும் நூதன போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
 
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது