தான் ஜூலை 2021 ஆண்டில் பதவியேற்றதும் தகவல் மீடியா துறைக்கு பொறுப்பாளரான ஒன்றிய இணை அமைச்சர் முருகனை பக்கத்தில் வைத்துக்கொண்டு..

மீடியாவை அடுத்த ஆறு மாதத்தில் முழுவதுமாக கன்ட்ரோலுக்கு கொண்டு வந்து விடுவோம் என்று நீட்டி முழங்கியவர் தான் பாஜகவின் தலைவர் அண்ணாமலை..

எதிர்வினையாக தமிழ்நாட்டு மீடியா உலகில் இருந்து கடும் கண்டனங்கள் வந்தவுடன் நான் சொன்னது சோசியல் மீடியாவை என்று உடனடியாக பல்டி அடித்து பின் வாங்கினார்..

பின்னர் தமிழ்நாட்டு மக்கள் விரோத மோடி மற்றும் அமித் ஷா ஆசியுடன் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் மற்றும் இந்து கோயில்களை திறக்கவேண்டும் என அவர் தொடங்கிய அனைத்துப் போராட்டங்களும் காமெடி காட்சிகளாக மாறிப் போனது தான் தமிழ்நாடு கடந்த 5 மாதத்தில் கண்ட காட்சி..

உச்சக்கட்ட காமெடி ஒன்றும் அரங்கேறியது.. அது அவருக்கு போட் கொண்டான் என்ற பட்டப்பெயர் புகழைத் தந்தது.. ஒன்றையடி தண்ணீரில் போட்டோஷூட் எந்த மடையனாவது இப்படி செய்வானா என்று கேட்காத ஆட்களே இல்லை..

ராகவன் பூஜையறை விவகாரத்தில் பாஜக நிர்வாகி பெண்கள் கொடுத்த புகார்கள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்படும் என்று கூறிய நிலையில்..

நாக்பூர் ஆர்எஸ்எஸ் ஆட்கள் போட்ட முட்டுக்கட்டை காரணமாக விசாரணை யில் எந்த முன்னேற்றம் காண முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த காரணத்தினாலும்..

இது போதாதென்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆயிரக்கணக்கான பேக் ஐடிகளை வைத்து நிர்வாகித்து கொண்டிருந்த பிரிவினைவாதம் பேசிய தீவிரவாதம் பேசிய மாரிதாசை நீதிமன்றம் தனது காவலில் எடுத்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல்..

நிதானம் இழந்து தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மட்டுமல்ல தேவையில்லாமல் நீதிபதிகளையும் வம்புக்கு இழுத்தார் திரு அண்ணாமலை..

அரசியலில் இதுகாறும் நாம் பார்த்தவரை கண்டிராத ஒரு காட்சி.. ஆம் மாரிதாஸ் கைதுக்கு அதுவும் தேசத்துரோக காரணம் கைதுக்கு பத்திரிகை சங்கம் வாழ்த்து தெரிவிக்கிறது.. மருத்துவ சங்கம் வாழ்த்து தெரிவிக்கிறது..

சோசியல் மீடியா உலகமும் இன்னும் ஒருபடி மேலே சென்று தேசத்துரோக வழக்கு கைதை தீபாவளியாக கொண்டாடி மகிழ்கிறது..

இப்படி எல்லார் மீதும் கல்லெறிந்து சென்ற ஒருவன் மீது சில குறிப்பிட்ட ஒரு சாதி மீடியா பிரபலங்கள், உதாரணம் பத்ரி, பாண்டே மற்றும் சுமன் போன்றவர்கள் மட்டுமே ஆதரவுக் கரங்களை நீட்டி உள்ளன..

தமிழ் ஸ்பெல்கோ தனது சட்டப் பிரிவின் மூலம் மாரிதாஸ் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை உள்ளடக்கிய 13 டிவிட்டுகளை அடையாளப்படுத்திய செயல் ஆதாரமாக ஆகியுள்ளது..

இந்தநிலையில் தான் நேற்று முப்படை தளபதி மற்றும் ராணுவத்திற்கு மரியாதை செலுத்தாத ஆளுநரை சந்தித்து விட்டு புலம்பல்களை மொத்தமாக கொட்டிவிட்டு..

வழக்கமாக வாய் சொல்லில் வீரராக பேசும் பழக்கமுள்ளவர் தற்போது மீடியாவை சந்திக்க முடியாமல் ஓடியுள்ளார் திரு அண்ணாமலை அவர்கள்..

எதற்கெடுத்தாலும் 17 மாநிலத்தில் எங்கள் பாஜகவின் ஆட்சி நாங்கள் அந்தப் பதினேழு மாநிலத்திலிருந்து வழக்குப்பதிவு செய்ய முடியும் எங்களால் என்று மார்தட்டியவரை பார்த்து ஏனப்பா இப்படி பயந்து ஓட வேண்டும் என மீடியாக்கள் நமட்டு சிரிப்புடன் கேட்கின்றன..

இங்கு ஒரு விஷயத்தை பாஜக தமிழக தலைவர் மறந்து விடுகிறார் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் 13 உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து ஏற்கனவே ஒரு மாநிலம் நடப்பு காலத்திலே பாஜகவின் ஒன்றிய அமைச்சரை தூக்கி உள்ளே வைத்தது.. ஆம் மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் அது நடந்தது..

இதை மனதில் வைத்துக் கொண்டு அடக்க வேண்டியதை அடக்கி இனியாவது பொறுப்புடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும் திரு அண்ணாமலை அவர்கள்..

திமிர் அகம்பாவம் ஆணவம் எல்லாம் இருந்தால் அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், மக்கள் நிராகரித்து விடுவார்கள் அத்தகைய கயவர்களை என்பதை ..

ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலிதாவின் சாராய ஆலைகளுக்கு பினாமியாக மாறிய சோவே மிகச்சிறந்த உதாரணம்..

அண்ணாமலை நீங்களோ எங்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்.. கடுமையாக உழைத்து பாஜக தலைமை பொறுப்புக்கு வந்தவர்.. அங்குள்ள ஒரு சாதி குழுக்கள் உங்களை இயங்கவிடாமல் தடுக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது..

இருந்தாலும், மேலே சொன்ன விஷயங்களை கருணையுடன் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஜாதி வெறி முற்றிய குருமூர்த்தி போன்றவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடக்காமல்..

இனி உங்களது நடவடிக்கையை பேச்சு வழக்கத்தை மாற்றி, அறிஞர் அண்ணா மக்கள் தலைவர் காமராஜ் சொன்னது போல.. தமிழக மக்கள் அன்றாட பிரச்சினைக்காக குரல் இனியாவது கொடுக்க வேண்டாமா திரு அண்ணாமலை அவர்கள்..

இதன் முதல் படியாக சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய மோடி அரசு நயவஞ்சகமாக நீக்கிய அறிஞர் அண்ணா கர்மவீரர் காமராஜ் பெயரை உடனடியாக போராடி மீட்கும் நடவடிக்கையில் இறங்குங்கள்.. முதலில் இதை செய்தால் மக்கள் ஆதரவு உங்களுக்கும் கிட்டும்..

https://www.facebook.com/savenra/posts/7520390191320172