சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த சிறிது நேரத்தில், தானும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தது ரசிகர்களை அடுத்தடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தனது ஓய்வு முடிவுகளை அடுத்தடுத்து எடுத்துள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர் தோனி இன்று மாலை 7.29 மணியில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தல தோனியின் அறிவிப்பை தொடர்ந்து, சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதில் “உங்களுடன் விளையாடுவதை போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் வேறொன்றுமில்லை.

எனது இதயத்தில் நிறைந்த பெருமையுடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர நான் விரும்புகிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்!” என்று சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தோனிக்கு செலுத்தும் மரியாதை போல, அதே நாளில் ரெய்னா ஓய்வை அறிவித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்திய அணிக்கு சென்றால், அது இளைஞர்களின் வாய்ப்பை பறிப்பது போல மாறிவிடும். அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது என்ற முடிவை இவர்கள் எடுத்துள்ளனர். இதுவும் ஒரே நாளில் இருவரும் ஓய்வை அறிவிக்க காரணமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க: கூல் கேப்டன் ‘தல தோனி’ சர்வதேச போட்டிகளில் திடீர் ஓய்வு.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்