இந்தியாவில் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது.
 
இந்த நிறுவனத்துக்குக் கீழ்தான் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் இயங்கிவருகிறது. BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது ஹன்சா ரிசர்ச். மும்பையில் மட்டும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் 2,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்திருக்கிறது.
 
இந்த வழக்கில் மும்பை காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் குறித்தும் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் பேசியிருந்தார். “BARC நிறுவனத்திடமிருந்தும் சந்தேகத்துக்கிடமாகப் பெறப்பட்டிருக்கும் டி.ஆர்.பி புள்ளிகள் குறித்த ஆதாரங்களைப் பெற்றிருக்கிறோம்.
 
இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்துவருகிறோம். டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி செய்து, அதன் மூலம் விளம்பரங்களைப் பெற்று பணம் ஈட்டினாலும் அது குற்றமே.
 
அது குறித்த விசாரணையைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், ” டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி அதன் மூலம் விளம்பரங்களைப் பெறுவதற்காக மும்பையிலுள்ள சில வீடுகளுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரே சேனலை பார்க்கவைத்திருக்கிறார்கள். தங்கள் சேனலைப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒரு வீட்டுக்கு, மாதம் ரூ.400 முதல் ரூ.700 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது.” என பகிரங்க குற்ற சாட்டு வைக்க பற்றி எரிய அரம்பித்தது மும்பை சார் மீடியா வட்டாரம்
 
“BARC மற்றும் ஹன்சா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோல நடக்கும் சில வீடுகளின் விவரங்களை எங்களுக்கு வழங்கினார்கள்.
 
அவற்றில் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தோம். ஒரு குறிப்பிட்ட சேனலைப் பார்ப்பதற்காகப் பணம் பெற்றதை அந்த மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள்” என்றும் பரம்பீர் சிங், மும்பை போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார்.
 
ஆனால் ரிப்ப்ளிக் டி.வி மீதான டி.ஆர்.பி முறைகேடு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அர்னாப் கோஸ்வாமி,

காந்தியை கொல செய்த உள்ளிட்ட காரணங்களுக்கும் இது காறும் மூன்று முறை தடை செய்யப்ப்ட்ட ஆர் எஸ் எஸ் க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் ஆர்னாப் கோஸ்வாமி .. முதலின் டைம்ஸ்னவ் டிவியில் பணியாற்றிய இவர் மேலும் இவர் தற்போது நடத்தும் ரிபப்ளிக் டிவி சேனல் பங்குதாரர் பாஜக எம்பி என்பதும் குறுப்பிடதக்கது . இவர் பாஜக கடுமையாக ஆதரித்தும் காங்கிரசை பகிரங்கமாக எதிர்த்து வருவதால் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பாஜகவினர் ஆதரவை பெருவாரியாக பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது

“மும்பை காவல்துறை மீது அவதூறு வழக்கு பதியவிருக்கிறோம். சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீரிடம் நாங்கள் பல கேள்விகளை எழுப்பினோம்.
 
அதன் காரணமாகத்தான் இப்போது ரிபப்ளிக் டி.வி-யின்மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். அவர் பொதுவெளியில் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது எங்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
 
அர்னாப்பின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்திருக்கும் கமிஷனர் பரம்பீர் சிங், “எங்களிடம் இந்த விவகாரம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டது.
 
அந்தப் புகாரின் அடிப்படையில் எங்கள் பணியைச் செய்கிறோம். இதில் எவ்விதப் பழிதீர்க்கும் எண்ணமும் இல்லை” என்று விளக்கமளிக்க அதிர்ச்சியில் உறைந்து போனது அர்னாப் தரப்பு ..
 
டி.ஆர்.பி விவகாரத்தில், இரண்டு மராத்தி சேனல்களின் அதிபர்களையும், அந்த சேனல் நிறுவனங்களுக்கு டி.ஆர்.பி மீட்டர் குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரையும் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகிறது மும்பை காவல்துறை.
 
இதற்கிடையில் `இந்தியா டுடே’ செய்தி சேனலும் `ரிபப்ளிக் டி.வி’-யும் இந்த விவகாரத்தில் நேரடியாக மோதிக்கொண்டிருக்கின்றன.
 
சுஷாந்த் வழக்கு தொடங்கி பல்வேறு விஷயங்களில் இந்த இரண்டு செய்தி நிறுவனங்களும் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்து மறைமுகமாக மோதிக்கொண்டிருந்தன.
 
ஆனால் கடந்த 6-ம் தேதியன்று இந்தியா டுடே சேனலின் `கன்சல்டிங் எடிட்டர்’ ராஜ்தீப் சர்தேசாயும் ,அர்னாப் கோஸ்வாமியும் நேரடியாகவே மோதிக்கொண்டனர்.
 
`ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்துப் பேசாமல் சுஷாந்தின் வழக்கையே பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்ற கருத்தை முன்வைத்து, “நீங்கள் நடத்துவது வாழைப்பழ ரிப்பப்ளிக் டி.வி… பத்திரிகைப் பணியை உங்கள் அளவுக்குத் தாழ்த்திவிடாதீர்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஒரே அறிவுரை” என்று லைவ் ஷோவிலேயே பேசியிருந்தார் நேரடி தாக்குதல் தொடங்கினார்ல் சர்தேசாய்.
 
இதற்கு பதிலளிக்கும்விதமாக லைவ் ஷோவிலேயே, “இந்த நாட்டில் சில ஊடகங்கள் நீண்டகாலமாகக் கதை சொல்லப் பழகியிருக்கிறார்கள்.
 
அவர்களுக்கு ஏற்றாற்போலக் குற்றங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஹத்ராஸ் வழக்கு பற்றி அவர் கேள்வியெழுப்பினார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் இந்தச் சம்பவத்துக்கு முன்பிருந்தே தொடர்பிலிருந்திருக்கிறார்கள். இது, இரு தரப்புக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது” என்று அர்னாப் பேசியிருந்தார்.
 
நாக்கு வெட்டப்பட்டு , முதுகு தண்டு உடைக்கப்பட்டு 4 உயர்சாதி தக்கூர் வாலிபர்கள் செய்த பாலியல் படுகொலையை மறைக்க பாஜகவின் யோகி அரசு அவர் உடலை போஸ்ட் மார்ட்டம் வருவதற்க்கு முன்னரே  எரித்ததால் மொத்த இந்திய மக்களும் பதைபதைக்கும் காலகட்டத்தில்  இவ்வாறு RSS வழி நடக்கும் அர்னாப் பேசியது கடும் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தநிலையில், நேற்று `இந்தியா டுடே’ நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் அர்னாப் கோஸ்வாமி காரைப் பின்தொடர்ந்து டி.ஆர்.பி விவகாரம் குறித்துக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
 
ஆனால் பதிலளிக்க பயந்து போய் கேமராவை நோக்கிக் கையசைத்துக்கொண்டே அங்கிருந்து ஓடி விட்டார் அர்னாப்.
 
இதையடுத்து டி.ஆர்.பி விவகாரத்தில், மும்பை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், `ரிபப்ளிக் டி.வி’-யின் பெயர் இல்லை. `இந்தியா டுடே’-வின் பெயர்தான் இருக்கிறது என்று ரிபப்ளிக் டி.வி-யில் செய்தி வெளியிட்டார் அர்னாப் கோஸ்வாமி.
 
இதற்கு பதில் கொடுக்கும்விதமாக மும்பை காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரைப் பேட்டி கண்டிருக்கிறது இந்தியா டுடே.
 
அந்தப் பேட்டியில், “இந்த டி.ஆர்.பி முறைகேடு வழக்கில் இந்தியா டுடே-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவிக்க அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம் அர்னாப் தரப்பு
 
`ரிபப்ளிக் டி.வி-யைச் சேர்ந்தவர்களிடம் அக்டோபர் 9 அல்லது 10-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்’ எனவும் மும்பை காவல்துறை தெரிவிக்க இந்த விஷயம் பற்றி எரிய ஆரம்பித்து உள்ளது ..
 
ஊருக்கே விபூதி அடிக்கும் அர்னாபுக்கே இனி விபூதி தான் என சமூக வலைதளைத்தில் கிண்டல் அடிக்க தொடங்கி உள்ளது பாஜக மற்றும் RSS தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என ஸ்பெல்கோவிடம் தெரிவித்தார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.