இந்தியாவில் 5 மாநிலங்களில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலையத்தை மூடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
குஜராத் மாநிலம் அகமதாபாத்,
தெலங்கானாவின் ஹைதராபாத்,
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ,
கேரளத்தில் திருவனந்தபுரம்,
மேகாலயாவின் ஷில்லாங்
 
ஆகிய நகர்ப்பகுதிகளில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலைய அலுவலகங்களை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சிக்கன நடவடிக்கையாக இந்த 5 அலுவலகங்களும் மூடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.