இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி.
 
1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார்.
 
அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.
 
2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் அர்னாப்.
 
2017 மே மாதத்தில், `ரிபப்ளிக் டி.வி’ தொடங்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒரு பகுதி நிதியுதவியை பிரபல மலையாள `ஏசியாநெட்’ ஊடக நிறுவனம் வழங்கியது.
 
அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ராஜீவ் சந்திரசேகர், அர்னாப்-உடன் இணைந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்கினார்.
 
ராஜீவ் சந்திரசேகர், 2018-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துவருகிறார்.
 
பா.ஜ.க-வில் இணைந்த பின்னர், ரிபப்ளிக் டி.வி நிறுவனத்திலிருந்து விலகினார் ராஜீவ். 2019-ம் ஆண்டு ஏசியாநெட் நிறுவனத்தின் பங்கை அர்னாப் கோஸ்வாமியே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
2017-ல்,`ரிபப்ளிக் டி.வி’ என்ற பெயரில் ஆங்கிலச் செய்தி சேனலும், 2019-ல் `ரிபப்ளிக் பாரத்’ என்ற பெயரில் இந்திச் செய்தி சேனலும் ரிபப்ளிக் ஊடக நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
 
ரிபப்ளிக் டி.வி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 100 வாரங்களுக்கு, இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கில செய்தி சேனலாக அதுதான் இருந்தது எனச் செய்தி வெளியிட்டது `ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை.
 
இந்தியாவில், டி.ஆர்.பி-யைக் கண்டறியும் நிறுவனமான BARC, 2019-ம் ஆண்டின், முதல் காலாண்டில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலச் செய்தி சேனல்களின் பட்டியலில் பல நாள்கள் ரிபப்ளிக் டி.வி-தான் முதலிடம் பெற்றது என்ற தகவலை வெளியிட்டது. `
 
ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ரிபப்ளிக் டி.வி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், போகப் போக நெகட்டிவ் கமென்ட்டுகளுக்கும் ஆளானது ரிபப்ளிக் டி.வி’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
 
முதலாவதாக, மே 2017-ல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூர், ரிபப்ளிக் டி.வி மீது வழக்கு தொடர்ந்தார்.
 
தன் மனைவியின் மரணம் குறித்துத் தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்புவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில், ரிபப்ளிக் டி.வி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் சசி தரூர்.
 
அதைத் தொடர்ந்து இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் ஆகியவற்றின் விதிகளை மீறியதற்காகத் தண்டனை பெற்றது ரிபப்ளிக் டி.வி. பின்னர், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், போலிச் செய்திகளை வெளியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் ரிபப்ளிக் டி.விமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
 
காங்கிரஸ் கட்சி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவருவதாகக் கூறி, தங்கள் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்புகளில், ரிபப்ளிக் டி.வி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தது காங்கிரஸ்.
[su_spacer]
[su_spacer]
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் வழக்கைக் கையிலெடுத்து, இடைவிடாமல் தொடர்ந்து அந்த வழக்கு குறித்த செய்திகளைப் பதிவு செய்துவந்தது ரிபப்ளிக் டி.வி.
 
இதனால் சுஷாந்த் சிங் ரசிகர்களின் ஆதரவையும், பலமுறை ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பெற்றது ரிபப்ளிக் டி.வி. அதன் பிறகு இந்த வழக்கை மட்டுமே முன்னிலைப்படுத்துவதன் மூலம் பல முக்கியச் செய்திகளை வெளியிட மறுக்கிறது ரிபப்ளிக் டி.வி என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
 
`ஜி.டி.பி வீழ்ச்சி உள்ளிட்ட பா.ஜ.க அரசின் தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்பத்தான் சுஷாந்த் வழக்குக்கு ரிபப்ளிக் டி.வி இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது’ என்ற குற்றச்சாட்டை அரசியல் வல்லுநர்களும் நெட்டிசன்களில் சிலரும் தொடர்ந்து பதிவுசெய்து வந்தனர்.
 
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக மோசடி செய்திருப்பதாக ரிபப்ளிக் டி.வி உட்பட மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள்மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டது.
 
இது குறித்துப் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் (Parambir singh), “ஹன்சா ரிசர்ச் (Hansa Research) என்ற தனியார் நிறுவனம், `Fakt Marathi’, `பாக்ஸ் சினிமா’ ஆகிய மராத்தி சேனல்கள் மீதும் ஆங்கிலச் செய்தி ஊடகமான `ரிபப்ளிக் டி.வி’ மீதும் டி.ஆர்.பி-யில் முறைகேடு செய்திருப்பதாகப் புகாரளித்திருக்கிறது.
 
டி.ஆர்.பி புள்ளிகளில் சந்தேகத்துக்கிடமான போக்குகள் இருந்ததை அவர்கள் கவனித்தாக எங்களிடம் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார்கள். அந்த முரண்பாடான விவரங்களையும் எங்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
 
மேலும் ரிபப்ளிக் டிவி  வீட்டுக்கு மாதம் ரூ.400; டி.ஆர்.பி விவகாரத்தில் தருகிறது எனவும் சொல்ல பற்றி எரிய அரம்பித்தது விவகாரம் மீடியா உலகில் ..
 
இதையடுத்து டி.ஆர்.பி விவகாரத்தில், மும்பை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், `ரிபப்ளிக் டி.வி’-யின் பெயர் இல்லை. `இந்தியா டுடே’-வின் பெயர்தான் இருக்கிறது என்று ரிபப்ளிக் டி.வி-யில் செய்தி வெளியிட்டார் அர்னாப் கோஸ்வாமி.
[su_spacer]
இதற்கு பதில் கொடுக்கும்விதமாக மும்பை காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரைப் பேட்டி கண்டிருக்கிறது இந்தியா டுடே.
அந்தப் பேட்டியில், “இந்த டி.ஆர்.பி முறைகேடு வழக்கில் இந்தியா டுடே-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவிக்க அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம் அர்னாப் தரப்பு
[su_spacer]
`ரிபப்ளிக் டி.வி-யைச் சேர்ந்தவர்களிடம் அக்டோபர் 9 அல்லது 10-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்’ எனவும் மும்பை காவல்துறை தெரிவிக்க இந்த விஷயம் பற்றி எரிய ஆரம்பித்து உள்ளது ..
[su_spacer]
இந்த விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்பட்டால் அது இதுவரை ஏறுமுகமாக இருந்த RSS சித்தாந்த ஆதரவு  மீடியாவான `ரிபப்ளிக் டி.வி’   இனி இறங்கு முகம் காணும் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.