ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா ஒன்றிய மோடி அரசால் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்புக்காக நாடு முழுவதிலும் ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் தயாரிப்பு, 1775 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கொல்கத்தாவில் முதலாவதாக துவக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊட்டியின் அரவங்காடு மற்றும் சென்னையின் ஆவடி, உத்திரப் பிரதேசத்தின் கான்பூர், ஒடிசாவின் பொளங்கீர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட 41 இடங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவற்றை நிர்வாகிக்க ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறையின் கீழ் இயங்கும் இதை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது.

இவற்றில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஆயுதங்கள் உற்பத்தியில், ‘குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டுமே’ எனும் வகையான ஒரு கொள்கை ஒன்றிய பாஜக அரசால் உருவாக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகளில் நடைபெற்று வந்த பல முக்கிய ஆயுதங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம், சுமார் 20,000 கோடி ரூபாயாக இருந்த இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதியாகக் குறைந்து வருகிறது.

[su_image_carousel source=”media: 25324,25323″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

தற்போது, ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, நடுவர் மன்றங்கள் சீர்திருத்தங்கள் மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மோடி அரசால் குரல் வாக்கெடுப்பில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவு 2021 எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவு, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை மாற்றுகிறது. இந்தச் சட்டம் ஓராண்டுக்குத் தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் இந்தச் சட்ட முன்வடிவு குரல்வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு இடையே திவால் சட்டத்திருத்தச் சட்ட முன்வடிவு 2021 விவாதத்திற்காகவும் நிறைவேற்றுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இந்தச் சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் விவாதம் மேற்கொள்ளாமல் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு சிறுதுளியும் மதிப்பு அளிக்காமல், தங்களுக்கு ஏற்றார் போல் அரசியல் அமைப்பு சட்டத்தை பாஜக மோடி அரசாங்கம் மாற்றி அமைத்து வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இ-ரூபி: டிஜிட்டல் நிர்வாகத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது இந்தியா- பிரதமர் மோடி பெருமிதம்