போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்துறை, உயர்நீதிமன்றத்தை அவதூறாக எச்.ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து

சட்டவிரோதமாக கூடுதல்,
போலீஸ் உத்தரவை மதிக்காமல் செயல்படுதல்,
அரசு ஊழியரை செயல்பட விடாமல் தடுத்தல்,
நீதிமன்றம், போலீஸ் குறித்து அவதூறாக பேசுதல்,
பிற மத்தினர் மனம் புண்படும் விதமாக பேசுதல்,
ஆபாசமாக பேசுதல்,
உள்ளிட்ட குற்றங்களுக்காக புதுக்கோட்டை திருமயத்தில் வழக்கு பதிவு செய்யப்ட்டது .

தம் மீது எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அது தனது குரல் அல்ல என்று வழக்கம் போல எச்.ராஜா பல்டி அடித்துள்ளார் .முன்பும் பெரியாரை பற்றி தவறுதலாக மோசமாக பேசி அவரின் சிலையை உடைக்க தூண்டிய பதிவை டெலிட் செய்து விட்டு அது தனது அட்மின் போட்ட பதிவு என்று பல்டி அடித்து விட்டார் என்பதும் குறிப்பிடதக்கது