மலேசியாவில் இருந்து ராமையா நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் சென்று விற்க தமிழக அரசு தடை விதித்தது.

தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை எற்ற மதுரை உயர்நீதிமன்றம் அதிமுக அரசின் தடை உத்தரவை ரத்து செய்தது.

பின்னர் இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக மணல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டன்னுக்கு 2050 ரூபாய் வழங்க தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என்று அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விலையை தராமால் காலம் தாழ்த்துவதாக இறக்குமதி நிறுவனம் கூறியதை ஏற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டன்னுக்கு 2050 ரூபாய் வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை (ரூ.11.27 கோடி) ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எற்றுமதி இறக்குமதி கொள்கை என்பது மத்திய அரசின் கீழ் வருவது ஆனால் மணல் கொள்ளைக்கு ஆசைப்பட்டு தமிழக அதிமுக அரசே தேவை இல்லாமல் முக்கை உடைத்து கொள்வதாக வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் ..