ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை அனுமதிக்கும் மோடி அமைச்சரவை மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் 28-ம் தேதி கடையடைப்பு நடத்த போவதாக மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில மாநாட்டுக்கு பின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 28-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.

மருந்து வணிகர்கள் எதிர்ப்பு கொள்கையை கண்டித்து வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்ய போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் டிசம்பர் மாதம் நாடு முழுவதும் 3 நாட்கள் கடையடைப்பு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.