உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேருக்கும் அதிகமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழைக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். மழையால் ஷாஜகான்பூர் , அமேதி, ரேபரேலி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.

அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.