நியூசிலாந்து எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
 
இதனால் 29-வது ஓவரில் தான் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது. இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அம்பதிராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர்.
 
பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க கொலின் மன்ரோ 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
இதனை தொடர்ந்து களமிறங்கிய நிகோல்ஸ், 8 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 39 ரன்களும், டெய்லர் 1 ரன்களும், டாம் லதாம் 37 ரன்களும், கிராண்ட்ஹோம் 11 ரன்களும், நீஷம் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
 
பின்னர் 44.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வீரர்கள் ஆட்டமிழந்ததை அடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார பெற்றது.
 
நேப்பியர், மவுன்ட் மவுங்கானுயி மைதானங்களில் நடந்த முதல் 3 போட்டியிலும் அபாரமாக வென்று 3-0 என முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
 
4வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது.
 
5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 4-1 கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது …