இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை, சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த உத்தரவுக்கு எதிராக இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில், விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62), தனது தொழிலை பெருக்குவதற்காக பொதுத்துறை வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றார். ஆனால் அவர் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தவில்லை. வட்டியுடன் சேர்த்து அவர் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
 
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துக்களை முடக்கின. விஜய் மல்லையா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதால், அவரை சிபிஐயால் கைது செய்து இந்தியா அழைத்து வர முடியவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்ப கோரி லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
விஜய் மல்லையா மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி தொடங்கி ஓராண்டாக இழுத்தடித்தது.
 
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி எம்மா அர்பத்நாட் அளித்த உத்தரவில் :
 
விஜய் மல்லையாவுக்கு எதிராக பொய் வழக்கு போட்டுள்ளதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த பின், இதற்கு பதில் அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இவருக்கு எப்படி இவ்வளவு அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன; அவை எப்படி செலவிடப்பட்டன என்பது ஆச்சர்யமாக உள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்குகளை சந்திக்க 62 வயதான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்.” என கூறியுள்ளார்.
 
மேலும் தீர்ப்பு அளித்தால் மட்டும் அனுப்பி விட முடியாது காரணம் அவர் ப்ரிடிஸ் பிரஜை என்பதால் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் பரிந்துரையை நீதிபதி எம்மா இங்கிலாந்து அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு பரிந்துரைத்தார்.
 
இவர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் .
 
லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு உரிமை உள்ளது. இதனால் அவர் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் சட்டநிபுணர்கள் ..இதனால் தீர்ப்பு வந்தாலும் அவரை உடனிடையாக அழைத்து வரா சூழ்நிலை நிலவுகிறது.
 
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி லண்டன் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சிபிஐ வரவேற்றுள்ளது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், ‘‘இந்த முடிவை சிபிஐ வரவேற்கிறது. விஜய் மல்லையாவை விரைவில் இந்தியா கொண்டு வந்து இந்த வழக்கை முடிப்போம். சிபிஐக்கு தனி பலம் உள்ளது. இந்த வழக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். சட்டம் மற்றும் உண்மை விஷயங்கள் நாங்கள் வலுவாக இருந்தோம். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்’’ என்றார்.
 
லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே விஜய் மல்லையா அளித்த பேட்டியில், ‘‘நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை. கடனை திருப்பிச் செலுத்தும் வழிமுறை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கும், நான் இந்தியாவுக்கு அனுப்பப்படும் வழக்குக்கும் தொடர்பில்ைல. கடனை திருப்பிச் செலுத்த பொய்யான வழிமுறைகளை கூறி யாரும் நீதிமன்ற சட்டத்தை அவமதிக்க முடியாது. எனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவை பொய்யான சொத்துக்களாக இருக்க முடியாது. நான் பணத்தை திருடிவிட்டு ஓடிவிட்டேன் என கூறப்படுவதை பொய்யாக்க விரும்புகிறேன்’’ என்றார்.
 
மல்லையா செல்லும் முன்னரே  ஐபில் போட்டி நடத்தி அரசை 3500 கோடிகள் ஏமாற்றி விட்டு ஒடிய பாஜக அதரவு பிரமுகர் லலித் மோடி மீது இது வரை எந்த நடவடிகையும் ஏன் பாஜக அரசு எடுக்கவில்லை என சமூகவலைதளத்திலே கேள்விகள் எழுப்பி வருகின்றனர்