பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 14-வது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று (ஜூன்.20) சென்னையில் பெட்ரோல் ரூ.82.27 ஆகவும், டீசல் ரூ.75.29 ஆகவும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது. இருப்பினும், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக, ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10, டீசலுக்கு 13 என கலால் வரியை உயர்த்தியது. மற்றொருபுறம், மாநிலங்களும் வாட் வரியை உயர்த்தின.

இதற்கிடையில் 82 நாட்கள் கழித்து, கடந்த 7ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 14-வது நாளாக உயர்ந்து, பெட்ரோல் ரூ.82.27 ஆகவும், டீசல் ரூ.75.29 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதியில் இருந்து 14 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.72, மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.7.07 அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க: 13வது நாளாக ஏற்றம் கண்ட பெட்ரோல், டீசல் விலை..