உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
 
உத்தரபிரதேசத்தில் புலந்த்சார் மாவட்டத்தில் சினாய் கோட்வாலி சிங்ராவதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் இறைச்சி கூடத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக எழுந்த விவகாரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
 
அப்போது போலீசார் மீது பசுவதை அமைப்பு  கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார்.
 
 
இவர் நண்பரை கொண்டு விடுவதற்காக சென்றவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார்.