2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும்- பாரதிராஜா திட்டவட்டம்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், 2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளதாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். விபிஎஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்று நேற்று (நவம்பர் 9) நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. தற்போது யூஎஃப்ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் விபிஎஃப் கட்டணம் தேவையில்லை என்று … Continue reading 2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும்- பாரதிராஜா திட்டவட்டம்