13 மாதமாக சம்பளம் பாக்கி.. லதா ரஜினிகாந்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரமம் பள்ளியில் கடந்த 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என பணியாற்றிவரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் உயர்ந்த நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை கிண்டியில் ஆசிரமம் என்கிற பள்ளியை நடத்தி வருகிறார். 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில், சுமார் 69 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பள்ளி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். … Continue reading 13 மாதமாக சம்பளம் பாக்கி.. லதா ரஜினிகாந்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்