ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை- எய்ம்ஸ் மருத்துவக்குழு

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை முடிவடையாததால், ஆணையத்தின் விசாரணை காலம் ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆறுமுகசாமி … Continue reading ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை- எய்ம்ஸ் மருத்துவக்குழு